கோவை : வனத்தையும், மக்களையும் காட்சிகளாலும், வார்த்தைகளாலும் இணைக்கும் முக்கிய கருவியாக இருக்கும் மீடியாக்கள், வாசகர்களை கவருவதற்காக போலியான வனவிலங்கு புகைப்படங்களை பதிவிடுவதாக இறகுகள் அமைப்பின் நிறுவனர் என். ரவீந்திரன் தெரிவித்தார்.
கோவை : வனத்தையும், மக்களையும் காட்சிகளாலும், வார்த்தைகளாலும் இணைக்கும் முக்கிய கருவியாக இருக்கும் மீடியாக்கள், வாசகர்களை கவருவதற்காக போலியான வனவிலங்கு புகைப்படங்களை பதிவிடுவதாக இறகுகள் அமைப்பின் நிறுவனர் என். ரவீந்திரன் தெரிவித்தார்.

சர்வதேச வன தினத்தை முன்னிட்டு பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சுற்றுச்சூழல் மையத்தின் மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி அக்கல்லூரியின் சங்கமம் அரங்கில் நடைபெற்றது. அதில், இந்திய பறவை மனிதன் எனப்படும் சலிம் அலியின் முன்னாள் மாணவரும், இறகுகள் அமைப்பின் நிறுவனருமான என். ரவீந்திரன் கலந்து கொண்டு பேசினார். குறிப்பாக, இயற்கை பாதுகாப்பிற்கு தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்துவதை காட்டிலும், மீடியாக்கள் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய விஷயங்களை மாற்று கோணத்தில் காட்டுவதாக அவர் கூறினார்.
"மீடியாக்கள் உண்மைநிலையை வெளிப்படையாகக் காட்டுவது மிகவும் அரிதாகிவிட்டது. உணர்வுகளை தூண்டுவதற்கும், வாசகர்களை ஈர்க்க வேண்டும் என்ற நோக்கில் மட்டுமே மீடியாக்கள் செயல்படுகின்றன." என்கிறார் இறகுகள் அமைப்பின் நிறுவனருமான என். ரவீந்திரன்.

இதற்கு உதாரணமாக, 5 தலையுடைய பாம்பு போன்ற போலியான புகைப்படங்கள் பதிவிட்டிருப்பதை அவர் மாணவர்களிடம் எடுத்துக் காட்டினார். மேலும், வனவிலங்கு புகைப்படக்கலைக்கான நெறிமுறைகளையும், செய்யக் கூடாதவற்றையும் மாணவர்களிடம் அவர் விளக்கிக் கூறினார். விலங்குகள் மற்றும் பறவைகளின் குணாதியசங்கள் பற்றிய கல்விக்கு வனவிலங்கு புகைப்படங்கள் மிகவும் அத்தியாவசியம் என்றார்.
மேலும், இறகுகள் அறக்கட்டளையின் சார்பில் பள்ளி மாணவர்கள் மத்தியில் இயற்கை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும், 1,500 ஆசிரியர்கள் மற்றும் 10,000 மாணவர்கள் பங்கேற்கும் முகாம் இறகுகள் அறக்கட்டளையின் சார்பில் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச வன தினத்தை முன்னிட்டு பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சுற்றுச்சூழல் மையத்தின் மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி அக்கல்லூரியின் சங்கமம் அரங்கில் நடைபெற்றது. அதில், இந்திய பறவை மனிதன் எனப்படும் சலிம் அலியின் முன்னாள் மாணவரும், இறகுகள் அமைப்பின் நிறுவனருமான என். ரவீந்திரன் கலந்து கொண்டு பேசினார். குறிப்பாக, இயற்கை பாதுகாப்பிற்கு தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்துவதை காட்டிலும், மீடியாக்கள் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய விஷயங்களை மாற்று கோணத்தில் காட்டுவதாக அவர் கூறினார்.
"மீடியாக்கள் உண்மைநிலையை வெளிப்படையாகக் காட்டுவது மிகவும் அரிதாகிவிட்டது. உணர்வுகளை தூண்டுவதற்கும், வாசகர்களை ஈர்க்க வேண்டும் என்ற நோக்கில் மட்டுமே மீடியாக்கள் செயல்படுகின்றன." என்கிறார் இறகுகள் அமைப்பின் நிறுவனருமான என். ரவீந்திரன்.

இதற்கு உதாரணமாக, 5 தலையுடைய பாம்பு போன்ற போலியான புகைப்படங்கள் பதிவிட்டிருப்பதை அவர் மாணவர்களிடம் எடுத்துக் காட்டினார். மேலும், வனவிலங்கு புகைப்படக்கலைக்கான நெறிமுறைகளையும், செய்யக் கூடாதவற்றையும் மாணவர்களிடம் அவர் விளக்கிக் கூறினார். விலங்குகள் மற்றும் பறவைகளின் குணாதியசங்கள் பற்றிய கல்விக்கு வனவிலங்கு புகைப்படங்கள் மிகவும் அத்தியாவசியம் என்றார்.
மேலும், இறகுகள் அறக்கட்டளையின் சார்பில் பள்ளி மாணவர்கள் மத்தியில் இயற்கை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும், 1,500 ஆசிரியர்கள் மற்றும் 10,000 மாணவர்கள் பங்கேற்கும் முகாம் இறகுகள் அறக்கட்டளையின் சார்பில் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.